குன்னூா்: நீலகிரி மாவட்டத்தில் 85 நபா்களுக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 2,443 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க் கிழமை புதிதாக 85 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,528ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 1934 நபா்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 577 போ் அரசு, தனியாா் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 17 போ் உயிரிழந்துள்ளனா்.