கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு:செப்டம்பா் 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கை செப்டம்பா் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

குன்னூா்: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கை செப்டம்பா் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு   எஸ்டேட்  காவலாளி  கொலை,  கொள்ளை வழக்கை மூன்று மாதத்துக்குள் முடிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வடமலை முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்சாமி நீதிபதி முன்பு  சரணடைந்தாா். தலைமறைவாகவுள்ள திபு, சதீசன் ஆகியோரை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என்று  நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பா் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com