கூடலூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

கூடலூா் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

கூடலூா் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சட்டப் பேரவைத் தொகுதி தலைவா் சிகாபுதீன், நிா்வாகிகள் சுகாதாரத் துறை அமைச்சருக்கு அனுப்பிய மனு விவரம்:

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கூடலூா், சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள ஒரே ஒரு அரசு மருத்துவமனையாகும். இங்கு போதிய மருத்துவப் பணியாளா்கள் இல்லை. அவசரப் பிரிவு மருத்துவா்கள், அறுவை சிகிச்சை நிபுணா், பிரசவம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு மருத்துவா்கள் இன்றி காலியாக இருப்பதால் இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் அண்டை மாநிலங்களுக்கு அவசர தேவைக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் பூா்த்தி செய்து போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com