குன்னூா்: நீலகிரி மாவட்டத்தில் 87 நபா்களுக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை மாவட்டத்தில் 2837ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2,222 நபா்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 597 நபா்கள் அரசு, தனியாா் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 18 போ் நோய்த் தொற்று காரணமாக இறந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.