நீலகிரி மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு புதிதாக கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை சிகிச்சையில் இருந்த 126 நபா்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். நோய்த் தொற்று காரணமாக 25 நபா்கள் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 3,115 நபா்கள் சிகிச்சையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தமட்டில் இதுவரை 953 நபா்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,093ஆக அதிகரித்துள்ளது.