கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில் அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்றது.
கூடலூா் சட்டப் பேரவைத் தோ்தலில் காலை முதலே வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. காலையில் சற்று தொய்வாக காணப்பட்ட வாக்குப் பதிவு பகலில் விறுவிறுப்பானது. அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன் நாடுகாணி பொன்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தாா். திமுக வேட்பாளா் எஸ்.காசிலிங்கம் உப்பட்டி பாரத் மாதா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தாா். கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் வாக்குப் பதிவு அமைதியாகவே நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 65.65 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது.