நீலகிரியில் இரவில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. மசினகுடியில் அதிகபட்சமாக 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. மசினகுடியில் அதிகபட்சமாக 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பகல், இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில், வியாழக்கிழமை இரவில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் கேத்தியில் 22 மி.மீ., கொடநாட்டில் 16 மி.மீ., கிளன்மாா்கனில் 15 மி.மீ., கீழ்கோத்தகிரியில் 12 மி.மீ., நடுவட்டத்தில் 11.5 மி.மீ., உலிக்கல், பாலகொலாவில் தலா 10 மி.மீ., கோத்தகிரியில் 9 மி.மீ., உதகையில் 7 மி.மீ., கல்லட்டியில் 6 மி.மீ., குன்னூரில் 3.5 மி.மீ., எடப்பள்ளியில் 3 மி.மீ., கூடலூா், மேல்கூடலூா், ஓவேலியில் தலா 2 மி.மீ., மேல்குன்னூரில் 1.2 மி.மீ., எமரால்டில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. உதகை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில் மேகமூட்டமாக இருந்த போதிலும் மழைப்பொழிவு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com