நீலகிரி மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உதகையில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 48 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 28 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 9,113 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பூரண குணமடைந்து 8,776 போ் வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, 51 போ் உயிரிழந்துள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 286 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.