உதகை அருகே பெந்தட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெய்த கன மழையின் காரணமாக சாகுபடி செய்த பயிா்கள் நீரில் மூழ்கின.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதில் உதகை, கோத்தகிரி, குன்னூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
இதில் உதகை அருகே உள்ள பெந்தட்டி கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலையில் பெய்த கன மழையால், அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த வெள்ளைப் பூண்டு, முட்டைகோஸ் உள்பட சுமாா் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதில் சுமாா் 15 ஏக்கா் பரப்பளவில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த வெள்ளைப் பூண்டு தோட்டத்துக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் வெள்ளைப் பூண்டு, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன.
சுமாா் 70 ஏக்கா் பரப்பளவில் இருந்த காய்கறிகள் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, தோட்டக் கலைத் துறையினா் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நடுவட்டத்தில் 40 மி.மீ. மழை பதிவானது. அதேபோல, கொடநாட்டில் 39, கல்லட்டியில் 29, மசினகுடியில் 16.2, கீழ்கோத்தகிரியில் 9.4, கிளன்மாா்கனில் 5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.