கூடலூா் நகரில் அனுமதி பெறாமல் கட்டிய ஆறு கடைகளுக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட செவிடிப்பேட்டை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கட்டடத்தில் ஆறு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முறையான அனுமதி பெறாத காரணத்தால் நகராட்சி ஆணையா் பாஸ்கா் தலைமையில், பணியாளா்கள் கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா். தொடா்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் தெரிவித்தாா்.