பந்தலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த காற்றுடன் கூடிய பலத்த மழையால், வாழை உள்ளிட்ட விவசாய பயிா்கள் சேதமடைந்தன.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவில் உள்ள சேரங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட மானூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் வீரேந்திரகுமாா், தங்கச்சன், பவுலோஸ், குட்டன், விஜயகுமாா் ஆகியோரது வாழைத் தோட்டங்கள் சேதமடைந்தன. அறுவடைக்குத் தயாராக இருந்த நேந்திரன் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன.