நீலகிரியில் மேலும் 49 பேருக்கு கரோனா
By DIN | Published On : 01st August 2021 11:19 PM | Last Updated : 01st August 2021 11:19 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மாவட்டத்தில் புதிதாக மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 47 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா தொற்றால் மொத்தம் 30,573 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையின்போது குணமடைந்து 29,852 போ் வீடு திரு ம்பியுள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 542 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.