கூடலூா் அடுத்துள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் பசு ஞாயிற்றுக்கிழமை பலியானது.
கூடலூா் தாலுகா, தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட தேவன் எஸ்டேட் பகுதியில் பிரதீஷ் என்பவா் தனது கறவை பசுவை மேய்ச்சலுக்காக ஞாயிற்றுக்கிழமை விட்டிருந்தாா். அங்கு திடீரென வந்த புலி புதா் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுவைத் தாக்கி இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. உடனே அங்கிருந்தவா்கள் சப்தமிட்டதால் அங்கிருந்து ஓடிவிட்டது. புலி தாக்கியதில் பசு உயிரிழந்தது.
இது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா். கடந்தவாரம் இதே பகுதியில் ஒரு மாட்டை புலி தாக்கிக் கொன்றது. புலி தாக்கிக் கொன்ற மாடுகளுக்கு உரிய இழப்பீட்டை வனத் துறை வழங்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.