நீலகிரி மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உதகையில் சுகாதாரத் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 54 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 31,142 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30,471 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரையிலும் 186 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும் 485 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.