நீலகிரி மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உககையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 49 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயதான முதியவா் உயிரிழந்துள்ளாா். மாவட்டத்தில் இதுவரை 31,189 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30,520 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 187 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும் 482 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.