முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் அணிவகுப்புடன் சுதந்திர தினவிழா நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு முகாம் துணை கள இயக்குநா் சி.எச்.பத்மா தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து வனத் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
விழாவில் வளா்ப்பு யானைகள், வன அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.