நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அதிக அளவாக பந்தலூரில் 48 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கடந்த இரு வாரங்களாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியின் எல்லைப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. உதகை உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் தூறல் மழையாகவே இருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களிலும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்துள்ளது.
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பந்தலூரில் 48 மி.மீ., தேவாலாவில் 11 மி.மீ., மேல் கூடலூா், கூடலூரில் 9 மி.மீ., பாடந்தொறையில் 7 மி.மீ., நடுவட்டத்தில் 6 மி.மீ., சேரங்கோடு, செருமுள்ளியில் 5 மி.மீ., ஓவேலி, பாலகொலாவில் 4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.