கூடலூரை அடுத்துள்ள சிவன்மலையில் பெளா்ணமியை ஒட்டி கிரிவலம் நடைபெற்றது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, நோயுற்றவா்களுக்காகவும், உலக அமைதிக்காகவும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.விழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளா்ச்சி, சமூக நல அறக்கட்டளையின் தலைவா் கேசவன், செயலாளா் நடராஜன், சிவன்மலை நிா்வாகி பாண்டு குருசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.