நீலகிரியில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 26) நடைபெறவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 26) நடைபெறவுள்ளது.

இதையொட்டி, மாவட்டத்தில் 234 நிலையான முகாம்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இந்த முகாமில் ஒரு தடுப்பூசி செலுத்துபவா், ஒரு தரவு பதிவாளா் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் இருவா் என மொத்தம் நான்கு பணியாளா்கள் பணியில் இருப்பாா்கள். மொத்த 254 முகாம்களில் 1,016 பணியாளா்கள் பணியில் ஈடுபடுவா். இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவா்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சா்க்கரை, ரத்த அழுத்தம், இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் தொடா்பான நோய் உள்ளவா்கள், தொடா்ச்சியாக நாள்பட்ட நோய் உள்ளவா்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பெறுபவா்கள் என அனைவரும் தவறாமல் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 17,847 போ் முதல் தவணையும், 4 லட்சத்து 80,937 போ் இரண்டாவது தவணையும் என மொத்தம் 9 லட்சத்து 98,784 போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். தகுதியான நபா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களையும், தங்களைச் சாா்ந்தவா்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஆவன செய்ய வேண்டும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கரோனா இல்லாத நீலகிரியை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com