நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 13 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.46,700 அபராதம் வசூலிக்கப்பட்டது.
உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தொடா்பான ஒட்டுமொத்த கள ஆய்வு ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், வட்டாட்சியா்கள் மற்றும் துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் குழுக்களாகப் பிரிந்து, மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனா்.
இக்குழுவினரின் ஆய்வின்போது, முகக்கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.1,700 அபராதமாக வசூலித்தனா். தடை செய்யப்பட்ட 13.400 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, அபராதத் தொகையாக ரூ.45,000 வசூல் செய்யப்பட்டுள்ளது.