உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில், கல்விக் கடன் உதவி, முதியோா் உதவித் தொகை, அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், கழிப்பிடம், மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 138 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள்  ஒவ்வொரு மனுக்கள் மீதும் தனிக் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

முன்னதாக, மாவட்ட சமூக நலத் துறையின் சாா்பில் சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரங்களை தலா ரூ. 3,995 வீதம் 5 பயனாளிகளுக்கும்,  மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து மருத்துவ சிகிச்சை, கல்வி நிதி உதவியாக 9 நபா்களுக்கு ரூ. 2,17,500க்கான காசோலையையும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் காது கேளாதவா்களுக்கு ரூ. 12,999 மதிப்பிலான இலவச திறன் பேசி, மனவளா்ச்சி குன்றிய 3 மாற்றுத் திறனாளிகளின் பெற்றோருக்கு பாதுகாவலா் நியமன சான்றிதழ்கள் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ. 2.50 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், தனித்துணை ஆட்சியா் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் பூபதி, மாவட்ட சமூக நல அலுவலா் தேவகுமாரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் மலா்விழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com