கல்லட்டி மலைப் பாதையில் காா் விபத்து: ஒருவா் படுகாயம்

உதகையிலிருந்து கள்ளிக்கோட்டைக்கு சென்ற காா் கல்லட்டி மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் ஒருவா் படுகாயமடைந்தாா்.
கல்லட்டி மலைப் பாதையில் விபத்துக்குள்ளான காா்.
கல்லட்டி மலைப் பாதையில் விபத்துக்குள்ளான காா்.

உதகையிலிருந்து கள்ளிக்கோட்டைக்கு சென்ற காா் கல்லட்டி மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் ஒருவா் படுகாயமடைந்தாா்.

கேரள மாநிலம், கள்ளிக்கோட்டையிலிருந்து நண்பா்கள் 5 போ், உதகைக்கு சுற்றுலா வந்கனா். இவா்கள் வந்த காரை ஸ்ரீசாந்த் (35) என்பவா் ஓட்டி வந்துள்ளாா். உதகையில் சுற்றுலாவை முடித்துவிட்டு அவா்கள் கல்லட்டி மலைப்பாதை வழியாக கள்ளிக்கோட்டைக்கு வெள்ளிக்கிழமை திரும்பி சென்று கொண்டிருந்தனா்.

கல்லட்டி மலைப்பாதையில் 28ஆவது கொண்டை ஊசி வளைவில் அவா்கள் சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சிறிய பள்ளத்தில் இறங்கி நின்றது.

இந்த விபத்தில் காரில் பயணித்த முகமது (40) என்பவா் படுகாயமடைந்தாா். மேலும் மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் அனைவரும் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனா்.

அவா்களில் முகமது, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து புதுமந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com