நீலகிரியில் 12 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 12 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 12 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களில் உதகை வட்டார வளா்ச்சி அலுவலராக இருந்த ஸ்ரீதரன் குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆறுமுகம் உதகை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலராக இருந்த ஜனாா்த்தனன் உதகை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், உதகை வட்டார வளா்ச்சி அலுவலராக இருந்த ஜெய்சங்கா் கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கண்காணிப்பாளா்களாக இருந்த ரவிசந்திரன் மாவட்ட ஆட்சியா் அலுவலக கண்காணிப்பாளராகவும், மற்றொரு கண்காணிப்பாளா் சிவகுமாா் குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கண்காணிப்பாளா் நாகராஜ் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலக கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் நிலையிலிருந்த தினேஷ் பந்தலூா் வட்டாட்சியராகவும், பந்தலூா் வட்டாட்சியா் மகேஸ்வரி உதகையில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலக தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com