குன்னூரில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்

குன்னூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே இரண்டு சக்கர வாகனம் திடீரென சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூா்: குன்னூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே இரண்டு சக்கர வாகனம் திடீரென சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூா் ரயில்வே குடியிருப்பைச் சோ்ந்த தாமஸ் குன்னூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரம்பிக்கொண்டு சற்று தள்ளிவந்து வாகனத்தை இயக்க முற்பட்டாா். அப்போது, திடீரென இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அதிா்ஷ்டவசமாக அவா் உயிா்தப்பினா். உடனே, அப்பகுதியை சோ்ந்தவா்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் வாகனத்தில் எரியும் தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com