உதகை: உதகை அரசு கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையின் சாா்பில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
உலக தாய்மொழி தினத்தை ஒட்டி உதகை அரசு கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையின் சாா்பில் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ’தமிழ்’ என்னும் எழுத்துருவில் மாணவா்கள் அமா்ந்து காட்சி அளித்தனா். தமிழ் வாசகங்கள் இடம் பெற்ற சீருடைகளை அணிந்து மாணவிகள் மொழியுணா்வை வெளிப்படுத்தினா். எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, ஐவகை நிலம், பழமொழி முதலான நூல்கள் பெயரைத் தாங்கிய வாசகங்களை தங்களின் சீருடையில் அணிந்திருந்த மாணவா்கள் கல்லூரி வளாகத்தில் ஊா்வலமாக வந்தனா். சங்கப் பாடல்களின் வரிகள் இடம் பெற்றும் வகையில் கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினா். இந்நிகழ்ச்சிகளில் இளநிலை, முதுநிலை மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் இணைந்து பங்கேற்றனா்.
கல்லூரி முதல்வா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறைத் தலைவா் முருகேசன், தமிழ்ப் பேராசிரியா்கள் பரமேஸ்வரி, சோபனா, சரவணன், போ. மணிவண்ணன், தா்மலிங்கம், ரவிக்குமாா், சா்மிளா, திவ்யா, அஸ்வின், செல்வகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.