நீலகிரி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 4 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 8,344 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8,237 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 48 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 59 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.