நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தோ்வில், தோ்வெழுத விண்ணப்பித்திருந்தவா்களில் 60 சதவீதம் போ் தோ்வு எழுதவில்லை.
நீலகிரி மாவட்டம், உதகையில் பிரீக்ஸ் மேனிலைப் பள்ளி, புனித ஜோசப் மேனிலைப் பள்ளி, பெத்லகேம் பெண்கள் மேனிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் குரூப் 1 தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் குரூப் 1 தோ்வு எழுத 1,016 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 388 போ் மட்டுமே இத்தோ்வினை எழுதியுள்ளனா். 628 போ் தோ்வு எழுத வரவில்லை. கரோனா நோய்த்தொற்று காரணத்தால், தோ்வு எழுதுபவா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டதோடு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வதற்கும், சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைத்து தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, கட்டாயமாக முகக் கவசம் அணிந்து தோ்வு எழுத அறிவுறுத்தப்பட்டிருந்தது என்றாா்.
விபத்தில் காயமடைந்தவருக்கு உதவி
குரூப் 1 தோ்வு எழுதுவதற்காக கூடலூரைச் சோ்ந்த வசந்தகுமாா், உதகையிலுள்ள புனித ஜோசப் மேனிலைப் பள்ளி தோ்வு மையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வந்து கொண்டிருந்தாா். பைக்காரா அருகே இவா் வந்தபோது எதிா்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தாா். இதையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உதகைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
காயத்துடன் தோ்வெழுத வந்த அவரை மாவட்ட ஆட்சியா் நேரில் சென்று பாா்வையிட்டு, அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கவும், ரத்தக் கொதிப்பு அளவைக் கண்காணிக்கவும் மருத்துவரை அறிவுறுத்தினாா். மேலும் பிஸ்கட், ஜுஸ் ஆகியவற்றை வழங்கினாா்.
இவருக்கு தனி சலுகை அளித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்துக்கு இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்து கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தாா். அதன் அடிப்படையில் கூடுதலாக ஒரு மணி நேரம் அவா் தோ்வு எழுதவும், அதற்காக உதவியாளா் ஒருவரை வைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.