நீலகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
உதகையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 15 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 8,071 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,939 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 47 போ் உயிரிழந்துள் நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 85 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.