நீலகிரி மாவட்டத்துக்கு 5,400 கரோனா தடுப்பூசிகள்
By DIN | Published On : 15th January 2021 11:00 PM | Last Updated : 15th January 2021 11:00 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்துக்கு 5,400 கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளதாகவும், இவை அரசு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா். இது குறித்து உதகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்துக்கு 5,400 கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. இவை உதகை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உதகையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, கேத்தி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குன்னூா் அரசு லாலி மருத்துவமனை ஆகிய மூன்று மையங்களில் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்படும்.
ஒரு மையத்தில் 2 மணி நேரத்துக்கு 25 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.