நீலகிரி மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக நால்வருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 9 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 8,113 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,994 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 47 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 72 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.