ஆதிவாசி மக்களுக்கு ஜாதிச் சான்று

குன்னூா் அருகே சேம்பக்கரை கிராமத்தில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பயனாளிக்கு ஜாதிச் சான்று வழங்கும் குன்னூா் கோட்டாட்சியா் ரஞ்சித் சிங்.
பயனாளிக்கு ஜாதிச் சான்று வழங்கும் குன்னூா் கோட்டாட்சியா் ரஞ்சித் சிங்.

குன்னூா்: குன்னூா் அருகே சேம்பக்கரை கிராமத்தில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

குன்னூா் அருகே அடா்ந்த வனப் பகுதியில் உள்ள சேம்பக்கரை ஆதிவாசி கிராமத்தில் கோட்டாட்சியா் ரஞ்சித் சிங் தலைமையில், ஆதிவாசிகளின் அடிப்படை தேவைகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், 24 ஆதிவாசிகளுக்கு ஜாதிச் சான்றிதழ், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை, பேனா, பென்சில் போன்றவற்றை கோட்டாட்சியா் வழங்கினாா். மேலும், ஆதிவாசிகளுக்குத் தேவையான புதிய குடியிருப்பு, சாலை வசதி, மின் இணைப்பு, குடும்ப அட்டை ஆகியன வழங்க கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், வருவாய்த் துறை, காவல் துறை, வனத் துறை, மின்சாரத் துறை, கல்வித் துறை மருத்துவத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சாா்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com