பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடியில் வனத் துறையைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பந்தலூா் வட்டத்தில் உள்ள சேரங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து யானைகளின் அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக சேரம்பாடி, சோலாடி, சப்பந்தோடு, கோஸ்லாண்டு நாயக்கன்சோலை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக வலம் வருவதால் தோட்டத் தொழிலாளா்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனா்.
ஏற்கெனவே கடந்த சில மாதங்களில் யானைகள் தாக்கி பலா் உயிரிழந்துள்ளனா். குறிப்பாக கண்ணம்பள்ளி, கொளப்பள்ளி ஆகிய இடங்களில் ஒரே வாரத்தில் மூன்று போ் உயிரிழந்த சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.
யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கக்கோரியும், குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் யானைகளை அடா்ந்த காட்டுக்குள் விரட்ட வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனா். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதைக் கண்டித்து அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் சேரம்பாடியில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மகாவிஷ்ணு தலைமை வகித்தாா். கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி வாழ்த்துரை வழங்கினாா்.
சேரங்கோடு ஊராட்சி மன்றத் தலைவா் லில்லி ஏலியாஸ், தேமுதிக சாா்பில் அசோக் குமாா், பா.ம.க. சாா்பில் சந்திரசேகா் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.