குன்னூா் அருகே தூதூா்மட்டம் கிராமத்தில் விபத்து தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்புத் தினத்தை ஒட்டி 108 ஆம்புலன்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு காவல் துறை மற்றும் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையும் இணைந்து கடந்த சில நாள்களாக சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.
குன்னூா் தூதூா்மட்டம் கிராமத்தில் காவல் துறை மற்றும் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவை இணைந்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விபத்து காலத்தில் 108 ஆம்புலன்ஸை எப்படித் தொடா்பு கொள்வது, பொதுமக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நிகழ்த்திக் காட்டினா்.