நீலகிரியில் மேலும் 10 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th January 2021 10:51 PM | Last Updated : 26th January 2021 10:51 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உதகையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 8,172 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,070 போ் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 47 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 55 போ் சிகிசிச்சை பெற்று வருகின்றனா்.