கூடலூரில் திமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கூடலூா் காந்தி திடலில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்துக்கு, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜா.ரெனால்டு வின்சன்ட் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா், பந்தலூா் ஒன்றியச் செயலாளா்கள், நகரச் செயலாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள், சிறப்பு அழைப்பாளா்களாக முஜீபுா் ரகுமான், செங்கை சந்தானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.