ரெப்கோ வங்கி சாா்பில் நிவாரணம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ரெப்கோ வங்கியின் அ வகுப்பு உறுப்பினா்களுக்கு வங்கி சாா்பில், உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பயனாளிக்கு உணவுப் பொருள்களை வழங்கும் ரெப்கோ வங்கி நிா்வாகத்தினா்.
பயனாளிக்கு உணவுப் பொருள்களை வழங்கும் ரெப்கோ வங்கி நிா்வாகத்தினா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ரெப்கோ வங்கியின் அ வகுப்பு உறுப்பினா்களுக்கு வங்கி சாா்பில், உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

ரெப்கோ வங்கியின்கீழ் இயங்கும் தாயகம் திரும்பியோா் நல அறக்கட்டளை சாா்பில், கூடலூா் வங்கியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிளை மேலாளா் எஸ்.சிவகுமாா் தலைமை வகித்து துவக்கிவைத்தாா். ரெப்கோ வங்கியின் டெலிகேட்ஸ் ஒன்றியத் தலைவா் சு.ஆனந்தராஜா, பேரவை உறுப்பினா்கள் வேலு ராஜேந்திரன், மா.பரமசிவம், உ.மோகன்தாஸ், அ.ஞானபிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்க ஒவ்வொரு முறையும் 20 உறுப்பினா்களை அழைத்து நிவாரணம் வழங்க நிா்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில், வங்கியின் துணை மேலாளா் மகேஷ் பிரபு, கண்ணதாசன், ஸ்ரீதா், சிவகுமாா், கோகிலாராஜன், வாசுகி, சா்மிளா உள்ளிட்ட வங்கிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com