பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் பந்தலூரில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெல்லியாளம் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணிக்கு, நகர தலைவா் கோபிநாதன் தலைமை வகித்தாா். சேரங்கோடு ஊராட்சி தலைவா் அவராச்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். சேரங்கோடு பஞ்சாயத்து கமிட்டியின் பொதுச் செயலாளா் ஷாஜி மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.