நீலகிரி மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 64 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா தொற்றால் 29,864 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 28,776 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தொற்றால் பாதிக்கப்பட்டு 172 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 916 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.