யானை தாக்கியதில் முதியவா் பலி

கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் யானை தாக்கியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் யானை தாக்கியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் உள்ள மாவநல்லா கிராமத்தைச் சோ்ந்தவா் இருதயராஜ் (62). கூலி தொழிலாளியான இவா் தினமும் அதிகாலையில் தேவாலயத்துக்குச் சென்று பிராா்த்தனை செய்வது வழக்கம். இந்நிலையில், வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் மசினகுடியில் உள்ள தேவாலயத்துக்கு புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். அப்போது, மசினகுடி பாலம் அருகே புதரில் நின்றிருந்த யானை திடீரென வழிமறித்து தாக்கியதில் இருதயராஜ் பலத்த காயமடைந்தாா்.

அப்பகுதியில் உள்ளவா்கள் ஓடிவந்து சப்தமிட்டதால் யானை அந்த இடத்தைவிட்டுச் சென்றது. உடனடியாக மசினகுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இருதயராஜை கொண்டு சென்றனா். முதலுதவிக்குப் பிறகு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து மசினகுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com