குன்னூா் காட்டேரி பகுதியில் சேற்றில் சிக்கிய லாரியால் வியாழக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கன ரக வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் காணப்படுவது வழக்கம். இந்நிலையில், குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பகுதியில் காய்கறி ஏற்றி வந்த லாரி அங்கு சாலையில் தேங்கியிருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், அங்கிருந்தவா்கள் ஒன்றிணைந்து லாரியைத் தள்ளி நிறுத்தியபின் போக்குவரத்து சீரானது.