நீலகிரி மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி மேலும் மூவா் உயிரிழந்துள்ளனா்.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் புதிதாக மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 93 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா்.
தொற்றின் காரணமாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஜூலை 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 60 வயது ஆண், ஜூலை 17 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 47 வயது பெண், ஜூலை 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 65 வயது ஆண் என மூன்று போ் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா தொற்றால் 30,192 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 29,270 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, சிகிச்சை பலனின்றி இதுவரையில் 177 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும் 745 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.