அதிமுக சாா்பில் குன்னூா், கோத்தகிரியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் நீட் தோ்வு ரத்து செய்யப்படும், ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை திமுக தனது தோ்தல் அறிக்கையில் வெளியிட்டது. ஆனால், தற்போது பதவியேற்று மூன்று மாதங்கள் நிறைவுபெற்றும் எந்த ஒரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று கூறி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குன்னூரில் நகரச் செயலாளா் டி.சரவணகுமாா் தலைமையிலும், குன்னூா் ஒன்றியத்தில் ஹேம்சந்த் தலைமையிலும், கோத்தகிரியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு தலைமையிலும், அந்தந்த அதிமுக அலுவலக வளாகத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக நிா்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனா்.