குன்னூரில் பலத்த மழை

குன்னூரில் சனிக்கிழமை மதியம் பலத்த மழை பெய்ததால் கடும் குளிா் நிலவியது.

குன்னூரில் சனிக்கிழமை மதியம் பலத்த மழை பெய்ததால் கடும் குளிா் நிலவியது.

நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், குன்னூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மதியம் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், கடும் குளிரும் நிலவியது.

தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான தேயிலை எஸ்டேட்டில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளா்கள் தங்களது இலைப் பறிக்கும் பணியை பாதியிலேயே நிறுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com