நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்துள்ளது.
அதேபோல, உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகலிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக பந்தலூரில் 76.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீரில்): தேவாலா -37, சேரங்கோடு-33, எமரால்டு-32, கிளன்மாா்கன்-24, பாடந்தொறை -23, செருமுள்ளி-22, நடுவட்டம்-18, அவலாஞ்சி-16, குன்னூா்-15.5, உதகை-15.2, உலிக்கல்-15, கேத்தி மற்றும் மேல்பவானி தலா 13, கெத்தை-12, ஓவேலி-11, பாலகொலா-9, கூடலூா், மேல்கூடலூா் மற்றும் மசினகுடி தலா 8, கொடநாடு மற்றும் கீழ்கோத்தகிரி தலா 7, குந்தா மற்றும் கல்லட்டி தலா 6, கோத்தகிரி-5.6 மி.மீ.