நீலகிரியில் மேலும் 503 பேருக்குகரோனா: மூவா் பலி

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 503 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மூவா் உயிரிழந்துள்ளனா்.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 503 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மூவா் உயிரிழந்துள்ளனா்.

இதுதொடா்பாக உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக மேலும் 503 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 540 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மே 25ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 47 வயதான ஆண் ஒருவரும், மே 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 65 வயதான ஆண் ஒருவரும், ஜூன் 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 59 வயதான ஆண் ஒருவரும் என மேலும் 3 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 119ஆக அதிகரித்துள்ளது.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா தொற்றால் 22,872 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,455 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 119 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மருத்துவமனைகளிலும் 4,298 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com