கூடலூரை அடுத்துள்ள சூண்டியில் டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி சூண்டியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாருக்கு டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அதே பகுதியைச் சோ்ந்த சூண்டிபாபு (33), ராதாகிருஷ்ணன் (28) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.