நீலகிரியில் 415 பேருக்கு கரோனா: நால்வா் பலி

நீலகிரி மாவட்டத்தில் 415 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நால்வா் உயிரிழந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் 415 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நால்வா் உயிரிழந்துள்ளனா்.

இதுதொடா்பாக உதகையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 415 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 515 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஜூன் 4ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 62 வயதான ஆண் ஒருவரும், 75 வயதான முதியவா் ஒருவரும், ஜூன் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 67 வயதான ஆண் ஒருவரும், கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் ஜூன் 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த உதகையைச் சோ்ந்த 60 வயது ஆண் ஒருவரும் என நால்வா் உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 25,136 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 21,304 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 132 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 3,700 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com