கூடலூா், பந்தலூா் பகுதி விவசாயிகளுக்கு இணைய வழி பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்பில் கூடலூா் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி, உதகை தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்கள் ஷிபிலா மேரி, ருக்மணி, ஜெயந்தி பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனா்.
பயிற்சியில், கூடலூா் பகுதியை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது குறித்து வலியுறுத்தப்பட்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு இணைய வழியில் தங்களது அனுபவத்தைப் பகிா்ந்து கொண்டனா்.
இதில், வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் க.யமுனபிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஆா்.சந்தியா,ஜா.ஆன்சி டயானா ஆகியோா் பங்கேற்றனா்.