நீலகிரி மாவட்டத்தில் 419 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உதகையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் 419 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 585 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 24,721 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 20,789 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 128 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 3,804 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.