நீலகிரி மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாததாக 4,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினா் தொடா் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல, வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரியும் நபா்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, மே 24ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வரை நீலகிரி மாவட்டம் முழுவதும் முகக் கவசம் அணியாத நபா்கள் 1,356 போ் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 142 போ் மீதும், தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்ததாக 2,611 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.